வடக்கு மாகாண ஆளுநரின் தாயார் மேரி ஜோசபின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Thursday, November 23rd, 2023

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தாயார் திருமதி மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து, வருத்தம் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொறளை ஜயரத்ன மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் அன்னாரது பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொண்டார்

முன்பதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தாயார் திருமதி.மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் 21.11.2023 அன்று தனது 93 வது வயதில் கொழும்பில் இயற்கை எய்தினர் .

அன்னாரின் பூதவுடல் நேற்று 22.11.2023 முதல் கொழும்பு பொரளை எல்விட்டிகல மாவத்தை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை வெள்ளிக்கிழமை 24.11.2023 பிற்பகல் 2.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம்  செய்யப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சுயதொழில் துறைகளை ஊக்குவிக்க நாம் உறுதுணையாக இருப்போம் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா
அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில்முறைகளை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...
சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட நல நிதி கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்க...

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம் பொதுப் பவனைக்கு வரும் – அமைச்சர் டக்ளஸ் ...
வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!
குறுகிய அரசில் சுயலாபமே குடிநீர் பிரச்சினை தீரா பிரச்சினையாக தொடர்வதற்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் ச...