வடக்கில் சூறாவளி ஏற்பட்டால் எதிர்கொள்ள முன்னாயத்தம் – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Friday, December 15th, 2023

வட மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் காலநிலை மாற்றங்களால் ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ள சூறாவளியுடனான  பாதிப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் இணையவழி உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று (14.12.2023) மாலை  நடைபெற்றது.

சூம் செயலி ஊடக நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சரும் யாழ்/கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா,  வட மாகாண ஆளுநரும், வடமாகாண மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு இணைத்  தலைவருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மன்னார்/முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் குலசிங்கம் திலீபன்,  ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், ஜனாதிபதி அவர்களின் மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா, வட மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபர், வட மாகாணத்தின் 5 மாவட்டங்களின் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பணிப்பாளர்கள், உட்பட துறைசார்ந்த அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது - இரு தரப்பு சந்திப்பில் செயலாளர் நாயகம் டக...
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்த...