யாழ் வந்தடைந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அமைச்சர் டக்ளஸ் சிறப்பு வரவேற்பு! …….

Friday, July 12th, 2024


யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று (12.07.2024) காலை பிரதமர் தினேஷ் குணவர்தன
யாழ்ப்பாணம் வந்தடைத்தார்.

உலங்கு வானூர்திமூலம் அரியாலையிலுள்ள உதைபந்தாட்ட மைதானத்தில் வந்தடைந்த பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி சிறப்பு வரவேற்பளித்தார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விஜயத்தின் போது
யாழ்.மாவட்டச் செயலகத்தில்  யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு (DDC) கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் நாடாளுமன்ற உறுபினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாழ்வாதார உதவிகள் சிலவும் பயனாளிகளுக்கு வழங்கிவைத்திருந்தார்.
அதன்பின்னர் வாழ்வாதார உதவியாக அரிசி பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

Related posts:


வட பிரந்தியத்திற்கான பிரதான பிராந்திய முகாமையாளர் தொடர்பில் சுமகமாக தீர்வுகள் எட்டப்பட வேண்டும்!
இந்திய அரசின் உதவியுடன் தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர்...
இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவதாக கச்சதீவு செல்...