யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் பரிசீலிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 5th, 2022

யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் பரிசீலிக்கப்பட்டு முடிந்தளவு விரைவில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கும் பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதன்மூலம் மக்களுக்கு விரைவான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் கடலட்டை பண்ணை அமைக்கும் செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் நோக்கில் கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்தவர்களும் கலந்து கொண்டனர்

Related posts:

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை வென்றெடுக்க ஈ.பி.டி.பியால் முடியும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
தமிழ் மக்களின் தற்போதைய போக்கு கடவுள் வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாத நிலையை உருவாக்கும்- அமைச்ச...
அதிகாரிகளுக்கு பிரச்சினைகள் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர, ஆரம்பிக்கப்பட்ட வேலைத் த...

முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் ஓய்வூதியம் வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
யாழ் புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை...