யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Friday, November 5th, 2021

யாழ் மாவட்டத்தினை சேர்ந்த பலநாள் கலன் உரிமையாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் வி.எம். எஸ். எனப்படும் படகு கண்காணிப்பு கருவிகள், வானொலி தொடர்பாடல் கருவி போன்றவற்றை மீன் பிடிக் கலன்களுக்கு பொருத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதனிடையே யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றம் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சிறுமி சேயா படுகொலை வழக்கு போல் மாணவி வித்தியா படுகொலை வழக்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும் -  டக்ளஸ...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூக பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் வழிதிறந்து விடவேண்டும் - புதிய பாத...
கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகா...

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது- டக்ளஸ் தேவானந்தா
தொழிலாளர்கள் சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ...
வடக்கு வெள்ளத்தின் நஷ்ட ஈடுகள் வார்த்தை ஜாலங்களாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – ...