யாழ் மாநகரசபை சுகாதார சிற்றூழியர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நிறைவுக்குவந்தது!

Saturday, December 21st, 2019

யாழ் மாநகரசபை சுகாதார சிற்றூழியர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நேற்று இரவு யாழ் நகர் மின்சார நிலைய வீதிப் பகுதியில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த

யாழ் மாநகர சுகாதார பணியாளர்

மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தை அடுத்து சுகாதார தொழிலாழர்கள் தமது பணிகளை நிறுத்தியதுடன் இன்று காலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இன்னிலையில் குறுத்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் நிலைமைகளை அவதானித்ததுடன் சுகாதார ஊழியர்களது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக கூறி யாழ் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்திருந்தார்.

Related posts: