யாழ். மத்தியின் 200 ஆவது ஆண்டு ஆரம்ப  நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் டக்ளஸ் தேவானந்தா!

Monday, September 5th, 2016

யாழ்.மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு தின சிறப்பு நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.

கல்லூரி அதிபர் எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வின் முதலாம் நாள் நிகழ்வில் கலந்து சிறப்பித்த டக்ளஸ் தேவானந்தா 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாண ரீதியில் நடத்தப்பட்ட நாடகப்போட்டியில் வெற்றியீட்டிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

யாழ் மத்தியின் பழைய மாணவரான டக்ளஸ் தேவானந்தா குறித்த பாடசாலையின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றியிருந்தார்.

இன்றிலிருந்து வரும் 9ஆம் திகதிவரை நடைபெறும் இந்த விசேட நிகழ்வின் இறுதிநாளன்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பிற்கிணங்க  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

image-0-02-01-bb9db72b780963b39604322e500dd38f17500b3d0654c1b8557095aab23acda9-V

Related posts:

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையே சிறுபான்மை  மக்களுக்கு சாதகமானது - டக்ளஸ் தேவானந்தா!
உழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம் - மேதின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
பிரதேச சபைகளிலுள்ள சுகாதாரப் பணியாளர் பிரச்சினைகளை தீர்வு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்...

நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
கட்சிக் கொள்கையுடன் எமது உறுப்பினர்கள் வேலைத்திட்டங்ளை முன்னெடுத்து வருகின்றனர் – டக்ளஸ் எம்.பி. தெ...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு - மெய்நிகர் ஊடாக அமைச்சர் டக்ளஸ் துறைசார் ...