மீன்குஞ்சு வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சி திட்டம் – புதுமுறிப்பில் ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, November 19th, 2023


தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்துவதையும் நோக்காக கொண்ட மீன்குஞ்சு வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

சுமார் 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தேசிய நிகழ்ச்சி திட்டம் கிளிநொச்சி, புதுமுறிப்பு மீன் தொட்டிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

புதுமுறிப்பு பகுதியில் பிரதேச நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவற்காக  தனியார் தொண்டு  நிறுவனத்தினால்  அமைக்கப்பட்ட மீன் தொட்டிகள்  பராமரிப்பின்றி கைவிடப்பட்டு இருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய 20 மில்லியன் நிதி ஓதுக்கீட்டில் முதற்கட்டமாக 5 தொட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 19.11.2023.
0000

Related posts:

மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்?...
தேசிய நல்லிணக்கம் உணர்வுபூர்வமாக உருவாக்கம் பெறுவதற்கு படையினர் வசமுள்ள மக்களின் காணி நிலங்கள்  மீள ...
சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் - பொலிஸாரின் சாக்குப் போக்குகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க மு...

நீண்டகால யுத்தம், தவறான அரசியல் வழிநடத்தல் தமிழ் சமூகத்தை சீரழித்துள்ளது - சர்வமத பிரதிநிதிகள் சந்தி...
சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து மக்களை பாதுகாத்து அவர்களு க்கான உரிமைகளை வென்றெடு த்து கொடுப்பதே எமது ந...
கிளிநொச்சியில் அமையும் சர்வதேச தரமான விளையாட்டு அரங்கம் எமது இளைஞர்  யுவதிகளுக்கு வரப்பிரசாதமாக அமைய...