மீண்டும் சேவையில் குமுதினி – பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, June 23rd, 2023

நீண்ட வரலாற்று தொடர்பை கொண்ட குமுதினிப் படகு மீண்டும் சேவையில் இணைவதற்கு தயாராகியுள்ள நிலையில்,  இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

யாழ்.குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல் வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குமுதினி படகின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குமுதினி படகு 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

அதிகாரப் பகிர்விற்கு மாகாணசபை முறைமையை ஓர் ஆரம்பமாகக் கொண்டு  படிப்படியாக முன்னோக்கி நகருங்கள் - செய...
இரணைமடு குளத்திலிருந்து மீன்குஞ்சுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான செயற்றிட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவா...
சுயலாப கூக்குரல்கள் தொடர்பில் மக்களும் ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். - அமைச்சர் டக்ள...

மக்களின் ஆழ்மனக் கனவுகளை நனவாக்க நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கை சீர்ப்படுத்த நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை! அமைச்சர் டக்ளசின் முயற்சியால...
இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவா...