மாற்றம் ஒன்றைத்தவிர மாறாதிருப்பது ஒன்றுமல்ல – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 6th, 2018

இதுவரை இருந்தது கார்முகில்கள் சூழ்ந்த தேசம். இப்போதுதான் எழுந்து வந்திருக்கிறது  தேசத்தின் ஒளிவிடு சூரிய ஆட்சி.

ஆயிரம் கைகள் மறைத்தாலும்  சூரியன் மறைவதில்லை. இன சமத்துவ நீதியை உருவாக்க இணைந்து செயற்படும் இரட்டைத் தலைவர்கள் மைத்திரி மகிந்த உறவு பலப்பட வேண்டும்.

குருதியில் நனைந்த இலங்கை தீவெங்கும்  பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் வல்லமை படைத்த தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்.

விபூதி பூசும் இந்துக்களும் சிலுவை அணியும் கிறிஸ்தவர்களும் தஸ்பீர் கையில் ஏந்தியிருக்கும் முஸ்லிம்களும் போதிமரத்தை வழிபடும் பௌத்தர்களும்.,

இணைந்து வாழும் இலங்கைதீவை சமத்துவ பூமியாக்க வல்ல இரட்டைத் தலைவர்கள் வாழ்க. பொருளாதார அபிவிருத்தி இனி ஓங்கும். விலைவாசி உயர்வு இனி நீங்கும்.

இன சமத்துவம் இனி ஓங்கும். அழகிய எங்கள் இலங்கைத்தீவு செழிப்புற்று உயரும்.

வடக்கென்றும் தெற்கு என்றும் கிழக்கு என்றும் மேற்கு என்றும் மத்திய மலை நாடு என்றும் இனி பேதமிருக்காது.

இனி இங்கு வெறும் சொல்லாட்சியல்ல இரண்டு ஆளுமை மிக்க தலைவர்களும் இணைந்திருப்பதே  இனி மக்களாட்சி!

2018.11.05 ஆந் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய சிங்கள உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.

Related posts: