மலர்ந்தது தமிழர் அரசு என்று கூறியவர்களால் அழிந்தது வடக்கின் கல்வி – உரும்பிராயில் டக்ளஸ் எம்.பி!

Sunday, January 28th, 2018

யுத்த காலங்களிலும் சரி யுத்தம் நிறைவு பெற்று வடக்கு மாகாணத்தை ஆளுனரூடாக நாம் நெறிப்படுத்தியபோதும் சரி இலங்கையில் வடக்கு மாகாணம் கல்வியில் முதலிடத்தை பெற்றிருந்த நிலையில் அந்த மாகாணசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதன்பின் கல்வியில் இறுதி நிலையை எட்டியுள்ளது வேதனையளிக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்ட உரும்பிராய் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலே யே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாண சபையின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பில் பொதுமக்கள் இன்று நன்கு தெரிந்துகொண்டுள்ளனர். மலர்ந்தது தமிழரசு என்று கூறி ஆட்சி அதிகாரத்தை தம்வசம் கொண்டுள்ள கூட்டமைப்பினர் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் அவலங்களையும் துயரங்களையும் சுமந்துவாழும் மக்களது சாதாரண பிரச்சினைகளுக்குக் கூட அவர்களால் தீர்வுகாணமுடியாத நிலை காணப்படுவதுடன் நிதிமோசடியும் அதிகார துஷ்பிரயோகத்தாலும் அது மூழ்கிக் கிடக்கிறது.

எனவே மக்களது வாழ்வியல் நிலைமைகள் ஒளிபெறவேண்டுமாயின்  வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்தி எம்மை வெற்றி பெறவைக்கும் பட்சத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மட்டுமல்லாது  மாகாணசபையிலும் எதுவித துஷ்பிரயோகங்களும் நடைபெற இடமளிக்க மாட்டோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts:

வலி கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவ...
நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
கோண்டாவில் கலைவாணி இந்து மயான பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் - நிலமைகள் தொடர்பில் ஆ...

சிறுமி சேயா படுகொலை வழக்கு போல் மாணவி வித்தியா படுகொலை வழக்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும் -  டக்ளஸ...
தமிழ் பேசும் இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்க...
சிலைகளையும் அமைப்போம் - சிலைக்குரியவர்களின் கனவுகளையும் வென்றெடுப்போம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!