பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற தமிழ் பிரகிருதிகளே காரணம் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Wednesday, October 12th, 2022
தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற தமிழ் பிரகிருதிகளே காரணம் கன்னியா இராவணேஸ்வர் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிடைத்த அரச நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்படட திருகோணமலை இராவணேஸ்வர் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தை திறந்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைத்து வரப்பட்டார்.
திருகோணமலை, கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஒன்றுகூடல் மண்டபத்தை திறந்து வைப்பதற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராவணேஸ்வரர் சிவன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளிலும் பங்குபற்றினார்.
தமிழர்களின் கலாசார நடனங்களில் ஒன்றான கும்மி நடன வரவேற்போடு அழைத்து வரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தினை திறந்து வைத்தார்
இதனிடையே திருகோணமலை சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த களப்பு பிரதேசத்தினை கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், வனவள ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து முகாமைத்துவம் செய்து களப்பினை பாதுகாப்பதற்கான சாதக பாதகங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.
000
Related posts:
|
|
|


