பாலுற்பத்தித் திட்டம் வடக்கு கிழக்கு பகுதிக்கும் பரவலாக்கப்பட வேண்டும் – புதிய பாதீட்டினூடாக டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016

புதிய வரவு செலவு திட்டத்தில் நாட்டில் பாலுற்பத்தியை விருத்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் முன்னேற்றகரமானவையாகவே காணப்படுகின்றன. இத் திட்டம் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கும் பரவலாக்கப்படுமென நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில் –

ஒரு பாலுற்பத்தியாளருக்கு 10 மாடுகள் வீதம் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இத்துறையை வளர்த்தெடுப்பதற்கு மேய்ச்சல் தரைகளையும் நாம் அதிகமாக உருவாக்க வேண்டியுள்ளது. வடக்கு – கிழக்குப் பகுதிகளில் மேய்ச்சல் தரைகள் இல்லாமை காரணமாக இத்துறையை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையும் அவதானத்தில் கொள்வது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

001

Related posts:

பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் உருவச்சிலைக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்ச்செண்டு சார்த்தி மரியாதை!
இன - மத ரீதியான அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது - நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் அமைக்...
அனைத்து தமிழ் தலைவர்களுக்கும் சிலை அமைக்கப்படும் - தியாகி சிவகுமாரன் நினைவு தினத்தில் அமைச்சர் டக்ளஸ...

கிழக்கிற்கான ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினரை இணைத்துக் கொள்ள இணக்கம்: அமைச்சர் டக்ளஸின் முயற்சிக...
ஊர்காற்றுறை, கண்ணகி அம்மன் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - பயணிகள் போக்குவரத்தி...
பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் - பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்...