பளை மாசார் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

Friday, August 5th, 2016

பளை மாசார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

மாசார் பகுதிக்கு இன்றையதினம் (5) விஜயம் மேற்கொண்டிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாசார் பிள்ளையார், பாணாவில் சித்திவிநாயகர், வாணன்பதி அம்மன் ஆகிய ஆலயங்களுக்கு சென்று ஆலய கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டதுடன் அது தொடர்பில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன் குறித்த பகுதி மக்களது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தவநாதன் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

DSCF1587

2

03

4

9

5

6

Related posts:

இரணைமடு நீர்த்திட்டம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்திருக்கும் நிலைப்பாடு சக தமிழ் கட்சித் தல...
கிராம மட்டங்களில் கட்சியின் செயற்றிட்டங்களை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்புவோம் - டக்ளஸ் தேவானந்தா!
முல்லை. நாயாறு களப்பு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை!

பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் உருவச்சிலைக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்ச்செண்டு சார்த்தி மரியாதை!
நாடாளுமன்ற தேர்தல் 2020: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட...
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டுகளும் மக்களின் நலன்சார்தவை அல்ல - அமைச்சர் டக்ள...