பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளுடன் இடம்பெற்று முடிந்த 2023 ஆம் வருடத்துக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Thursday, December 28th, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தின் 2023 ஆம் வருடத்துக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் வடமாகாண ஆளுநருமான திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முப்படைகளின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் என பல்வேறுபட்ட துறைசார்ந்தவர்களும் கலந்து கொண்டுடிமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வீதி விபத்துக்களை  தடுப்பது தொடர்பில் பொலிசாரின் பொறுப்புகள் அளப்பரியது -  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...
ஊர்காவற்துறை 'ஆரோ பிளான்ற்' திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் ...
கட்சியினால் மேற்கொள்ப்படுகின்ற வேலைத் திட்டங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுவதில்லை - அமைச...