பலநாள் படகு உரிமையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Monday, March 13th, 2023

பலநாள் படகு உரிமையாளர்களின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று (13.03.2023) நடைபெற்ற கலந்துரையாடலின்போது பலநாள் படகு உரிமையாளர்கள், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள்  தொடர்பாக அமைச்சரிடம் எடுத்துரைத்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் வீழ்ச்சி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில் தமது தொழிலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு டீசல் விலையில் மானியங்களைப் பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தற்போதைய நிலையில் மீனின் விலை குறைந்துள்ளதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மீன் ஏற்றுமதியின்போது அவற்றின் தரம் குறித்து பரீட்சிக்கப்பட்டு தரம் உறுதிப்படுத்தப்படும்போது மீன் ஏற்றுமதியாளர்களிடையே நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பலநாள் படகு உரிமையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் தமது பிரச்சினைகளை ஜனாதிபதியை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.  

இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பலநாள் படகு உரிமையாளர்கள், அமைச்சின் மேலதிகச் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் கலந்து கொண்டிருந்தார்.

Related posts:

மக்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது - சக்தி தொலைக்காட்ச...
முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் ஓய்வூதியம் வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் தமிழர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நடைபெறவேண்டு...

வடக்கு கிழக்கில் தொழில் துறைகளை மேம்படுத்தவோ உருவாக்கவோ அரசு அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்பி தெரிவ...
காணாமல் போன உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விருப்பம் தெரிவித...
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!