நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
Wednesday, June 15th, 2022
நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுந்தீவின் கரையோரப் பிரதேசங்களில் சேருகின்ற கடல்பாசிகளை சேகரித்து ஏற்றமதி செய்வதற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறு, நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளினால் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து தேவையான அனுமதிகளை வழங்குமாறு தெரிவித்தார்.
இதன்மூலம் நெடுந்தீவில் வாழ்ந்து வருகின்ற சுமார் 300 குடும்பங்களுக்கு மாதந்தோறும் சுமார் 50,000 ரூபாய் மேலதிக வருமானம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையின் மிக உயரமான மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சிற்பத் தேர் கட்டுமாணங்களை செயலாளர் நாயகம் ட...
ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விஷேட சந்திப்பு!
எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாம் தேசியமயப்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|
|


