அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி – நெடுந்தீவு மக்கள் மகிழ்சி!

Saturday, April 25th, 2020

நெடுந்தீவு வெட்டுக்களி ஏறியிலிருந்து பெருமளவு இறால் அறுவடையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர் வறுமையில் சிக்கியிருந்த தமக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்ட முயற்சி பேருதவியாக இருப்பதாக நெடுந்தீவு மக்கள் மகிழ்சி தெரிவித்துள்ளனர்.

இறால் வளர்ப்புக்கு உகந்த வடக்கின் வளமான அனைத்து இடங்களிலும் இறால் குஞ்சுகளை வளரச்செய்வதன் ஊடாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தமது பொருளாதாரத் உயர்த்திக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்த முடியுமென்ற தூரநோக்கு கருத்திட்டத்திற்கு அமைவாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வடக்கிலுள்ள நிலையான நீர் நிலைகள், பருவகால ஏறிகள் அடையாளம் காணப்பட்டு பல இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன.

அவ்வாறு நெடுந்தீவு வெட்டுக்களி ஏறியில் விடப்பட்ட லட்சக்கணக்கான இறால் குஞ்சுகள் தற்போது வளர்ந்துள்ளதால் அங்கு மக்கள் இறால் அறுவடையை ஆரம்பித்துள்ளார்கள்.

நெடுந்தீவு வெட்டுக்களி ஏறியில் மட்டும் சுமார் 1500 கிலோ இறால் மக்களால் அறுவடை செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய கொராணா அச்சமும் தொடர்ச்சியான ஊரடங்கும் காரணமாக வறுமையில் பட்டினியை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தீர்க்க தரிசனமான நெடுந்தீவில் இறால் வளர்ப்பு நடவடிக்கையானது பேருதவியாகவும், வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளதாக நெடுந்தீவு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்

Related posts:

மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.
கோவில் காணிகளில் வாழும் மக்களுக்கு அக்காணிகளுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்க விசேட ஏற்பாடு ...
சமூக அக்கறையும் தொலை தூரப் பார்வையும் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

நாங்கள் சொல்வதைத்தான் அரசாங்கம் செய்கிறது என்றால் அரசு எதையுமே செய்யாதிருப்பதற்கும் இவர்களே பொறுப்பே...
மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன.அனுமதிக்க முடி...
யாழில் நவீன நண்டு கடலுணவு பதனிடும் தொழிற்சாலை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.