நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான பொருளாதா எதிர்காலத்தினை அரசாங்கம் உருவாக்கும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, January 30th, 2022

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான பொருளாதா எதிர்காலத்தினை தற்போதைய அரசாங்கம் உருவாக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மாட் வகுப்பறை கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்பதாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உருவாக்கப்பட்ட ஸ்மாட் வகுப்பறை கட்டிடத் தொகுதியை திறந்து வைப்பதற்காக வருகை தந்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீ. எல். பீரிஸ், அலி சப்ரி அடங்கிய அதிதிகள் அணி வகுப்பு மரியாதைகளுடன் பாடசாலை மாணவர்களினால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

Related posts:

வடக்கின் நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் சுரேன் ராகவன், ஈ.பி.டிபி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆ...
ஒருவருக்கு இருக்கும் பெயர் இன்னெருவருக்கும் இருக்கும் என்பதை தேர்தல் ஆணைக்குழு அறிந்திருக்கவில்லையா...
சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு - நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட வே...

ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்து வகைகளின் விலைகளைக் கட்டப்படுத்துகின்ற பொறிமுறையை அறிமுக...
அமரர் சிவஞானசோதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி செயலமர்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு...
வடக்கின் கடற்றொழிலுக்கு விசேட நிதி - சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துவோம் அமைச்சர் டக்ளஸ் தெரி...