தெற்கின் மீன்பிடி துறைமுகங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம்!

Thursday, February 2nd, 2023

தென் பகுதியில் இலங்கை மீன்பிடித் துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது,பேரலிய மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெறும் துறைமுக வாயில் அகழ்வுப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

பேருவளை கச்சேரியில் அரசாங்க அதிபரைச் சந்தித்து அங்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சர் கலந்துரையாடினார்.

பேருவளை, மருதானை மீன்பிடித் துறைமுகத்திற்கு கள விஜயம் செய்து அங்கு நடைபெறும் துறைமுகத்தை ஆழகுபடுத்தும் பணிகளையும் அமைச்சர் டக்ளஸ் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதில் தாமதம்: நிலையை சீர்செய்யுமாறு...
தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் குறித்த எமது எண்ணங்கள் இன்னம் மாறவில்லை நாடாளுமன்றில் செயலாளர்...
அரசாங்கத்தின் தீர்மானங்கள் எனது விருப்பத்திற்கு மாறாக அமையாது - அமைச்சர் தேவா நம்பிக்கை!