தீவகப் பகுதிகளில் வீட்டுத் தோட்டச் செய்கையாக தென்னை, மரமுந்திரி, பேரீட்சை போன்ற பயிர்கள் ஊக்கவிக்கப்படவேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, November 24th, 2017

தீவகப் பகுதிகளைப் பொறுத்தவரையில், வரட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையிலும் தென்னை, மரமுந்திரி, பேரீட்சை போன்ற பயிரினங்களை பண்ணை முறைமை ரீதியிலும் வீட்டுத் தோட்டச் செய்கைகள் என்ற ரீதியிலும் பயிரிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

அத்துடன், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இறப்பர் பயிர்ச் செய்கை மேற்கொள்வது குறித்து ஏற்கனவே பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அந்த ஏற்பாடுகள் தற்போது எத்தகைய நிலையில் இருக்கின்றன என்பது குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் அறியத் தர வேண்டும். மேலும், இத்தகைய எற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், தற்போது வறுமை நிலை அதிகம் கொண்டுள்ள அம் மாவட்டங்களின் மக்களுக்கு பொருளாதார ரீதியில் மிகுந்த நன்மை பயக்கக்கூடிய ஏற்பாடுகளே தேவை என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Untitled-4 copy

Related posts:

குடிநீரைப் பெற்றுத் தருவதற்குக் கூட ஆளுமையற்றவர்கள் கூட்டமைப்பினர் - பூநகரி பள்ளிக்குடா மக்கள் டக்ளஸ...
மாகாண சபைகளின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் எதுவித முயற்சிகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவி...
யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கூட்டம் - முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்...

மருதங்கேணியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்படும் கடற்றொழில் நடவடிக்கைக்கு சட்ட ரீதியிலான அனுமத...
தமிழர்களின் எழுச்சிக் குரலானது ஒன்று பட்டு ஒலிப்பதே ஆகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அமைச்சர...