தீவகத்தில் அமைகின்றன மின் உற்பத்தி நிலையங்கள் – குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024

யாழ்ப்பாணம் தீவகத்தில் அமையவுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அப்பகுதி மக்களிற்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில்  கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

யாழ்ப்பாணத்தில் அனலைதீவு உள்ளிட்ட சில தீவுகளில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் குறித்த மின் உற்பத்தி நிலையங்கள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படமாட்டாது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களிற்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில்  கலந்துரையாடவுள்ளதாக  அவர் தெரிவித்தார்.

அதனுடன், கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்திகள் அனுராதபுரம் மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை. சிலர் குழப்புவதற்காக இவ்வாறு கூறுகின்றனர். விரைவில் அதானி தரப்பினரை சந்திக்க உள்ளேன். அந்த சந்திப்பில் பல்வேறு விடயங்களை பேசவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார்.

000

Related posts:


வெற்றிக்கு கைகொடுங்கள்: எர்காலத்தை வென்றெடுத்து தருவேன் - புதுக்குடியிருப்பில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப...
முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
"மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்" - ஜனாதிபதியிடம் வலியுறுத்...