தனிப்பனைக் கிராமம் இரண்டாக பிரிவதை நிறுத்தித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செம்பியன்பற்று கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை!

Wednesday, September 13th, 2023

செம்பியன்பற்று கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக  கலந்துரையாடினார்கள்.

குறிப்பாக, சுமார் 184 கடற்றொழில் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற செம்பியன்பற்று கிழக்கு,  தனிப்பனைக் கிராமத்தினை சிலரின் குறுகிய நோக்கங்களுக்காக  இரண்டாக பிரிப்பதற்கு மேற்கொள்ளப்படு்ம் முயற்சிகளை நிறுத்துமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமையவே தீர்மானங்கள் அமைய வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும்,  சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்

000

Related posts:

வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளது வாழ்வியல் பாரபட்சமின்றி மேம்படுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்ற...
உள்ளூராட்சி தேர்தலை மக்கள் உரிய முறையில் பயன் படுத்தினால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும் ...
தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் அவை அமைக்கப்பட்டதன் நோக்கங்களை உணர்ந்து செயற்பட வேண்டும் – யாழ். பல்கலை...