தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Saturday, May 29th, 2021

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நேற்று (28.05.2021) தொலைபேசியில் உரையாடியபோதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கான தடுப்பூசி விநியோகம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,

முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பிரதேசங்களுக்கு அவை சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும்   தெரிவித்தார்.

ஜனாதிபதியின் குறித்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிப்புக்கள் அதிகமுள்ள பகுதிகளில் வசித்து வருகின்ற அனைத்து மதங்களின் குருமாருக்கும்  முன்னுரிமை அளிப்பது அவசியம் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

குறித்த கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

அதேவேளை, பௌத்த சாசன மத விவகார அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்கள் அவர்களும் தடுப்பூசி வழங்கும் போது பாதிப்புக்கள் அதிகமுள்ள பிரதேசத்தில் வசிக்கின்ற அனைத்து மதங்களினதும் குருமாருக்கு முன்னுரிமை அளிப்பது  தொடர்பாக அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எமது வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச உங்கள் வரவு அனுகூலமாகட்டும்  -  டக்ளஸ் தேவானந்தாவின் விஜயம் குறித...
தமிழ் மக்கள் மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தோற்றுவித்தவர்கள் நாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! 
நிர்க்கதியானவர்கள் வீடு திரும்ப புதனன்று தீர்வு – அமைச்சரவையில் கோரிக்கை வைக்கிறார் அமைச்சர் டக்ளஸ் ...

தடம் மாறிச் செல்லும் இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த முயற்சிப்போம்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
ஜெயபுரம், வன்னேரிக்குளம் வயல்க்காணி சர்ச்சை விரைவில் தீர்க்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!
நான் மன்னித்துவிட்டேன் - சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அந்தப் பெண்மணியின் விடுதலைக்கு நடவடிக்கை எடு...