ஜே.வி.பி மற்றும் ஈ.பி.டி.பி கட்சிகளுக்கிடையே நற்புறவுச் சந்திப்பு!

Wednesday, December 7th, 2016

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் மற்றும் நாளாந்தப் பிரச்சினைகள் தொடர்பாகவும், தேசியநல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஈ.பி.டி.பிக் கட்சியினருக்கும், ஜே.வி.பிக் கட்சியினருக்குமிடையே கலந்துரையாடப்பட்டது.

கொழும்பில் அமைந்துள்ளஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாதலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, அதன் தலைவர் அனுரகுமாரதிஸாநாயக்க, ரில்வின் சில்வா, விஜிதஹேரத், நலின்பண்டாரஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில்,புதிய அரசியலமைப்பு, தேசியநல்லிணக்கச் செயற்பாடுகளின் குறைபாடுகள், தமிழ் மக்களின் முதன்மைக்குரிய அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் விவகாரம் மற்றும் சமகாலவிடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் சிங்களமக்களின் பிரதிநிதிகளைஉள்ளடக்கியஆளுங்கட்சிமற்றும் எதிர்க்கட்சிகள் உட்படஅனைத்துக் கட்சியினருடனும் இவ்வாறானகலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள் தெரிவித்தள்ளார்.

unnamed (2)

unnamed (3)

unnamed (1)

Related posts:

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
இயற்கை அனர்த்தம் வேதனை தருகிறது! இலங்கை அரசு, இந்தியா உட்பட வெளிநாடுகளினதும், எமது மக்களினதும் மனி...
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற புதவருட சிறப்புப் வழிபாடுகளில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...

யாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதன் இறக்குமதி வரியை அதிகரிக்குமாறுடக்ளஸ் தேவா...
தொழில்சார் தகைமையாளர்களுக்கு வேலை வாய்ப்பு - இந்தியாவின் அனுசரனையை பெற்றுக் கொள்ள அமைச்சர் டக்ளஸ் தே...
மக்களை வலுப்படுத்தும் வகையிலான மாற்றங்களை உள்வாங்கி திடமாக நாட்டை முன்னேற்றுவதற்கு அனைவரும் திடசங்கற...