செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் விபரம்!
Thursday, March 19th, 2020நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வேட்பு மனு யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் –
- டக்ளஸ் தேவானந்தா – செயலாளர் நாயகம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
- ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன் தோழர்) – கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர்/ பருத்தித்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர்
- வைத்தியநாதன் தவநாதன் – கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் / வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்
- மருதையினார் ஜெயகாந்தன் (காந்தன் தோழர்) – கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளர் / தவிசாளர் ஊர்காவற்றுறை பிரதேச சபை
- வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் (ஜீவா தோழர்) – கட்சியின் வலி தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் / வலி தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்
- முடியப்பு றெமீடிஸ் – சட்டத்தரணி / யாழ் மாநகரசபை உறுப்பினர்
- திருமதி. சிறிதாரணி நிக்சன் – சமூக சேவகி கிளிநொச்சி
- கணபதிப்பிள்ளை சிவபாதம் – சட்டத்தரணி
- குலரட்ணம் விக்னேஷ் – (IIS கணனி நிறுவன நிர்வாக இயக்குநர்)
- கணபதிப்பிள்ளை காண்டீபராஜா – தொழில்நுட்பவியலாளர்
தேசிய பட்டியலில் –
- சிவகுரு பாலகிருஷ்ணன் – கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் / வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்
- திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா – ஓய்வுநிலை ஆசிரியர் / யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் / யாழ் மாநகர சபை உறுப்பினர்.
- திருமதி. கௌரி கியூபேட் அன்ரனி – கணனி தொழில்நுட்பவியலாளர்
- முருகேசு கதிர்காமநாதன் – வைத்தியர்
- கிருஸ்ணபிள்ளை மனோகரன் – ஓய்வுநிலை சிமெந்து கூட்டுத்தாபன உத்தியோகத்தர்
- பரமநாதன் கேசவரதாசன் – பாதுகாப்பு உத்தியோகத்தர் – யாழ் பல்கலைக்கழகம்
இதனிடையே வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வேட்பு மனு வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ் மற்றும் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன் ஆகியோரின் தலைமையில் குறித்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் –
- அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ் – கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர்
- குலசிங்கம் திலீபன் – கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர்
- இரத்தினம் ஜெகதீசன்
- ஜோசப் சுதர்சன்
- சுப்பையா சந்துரு – கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளர்
- சவோரியன் பெனவந்தூர் லெம்பேட்
- சிவராமலிங்கம் கிரிதரன்
- ராசு குகனெஸ்வரன்
- ராசநாயகம் எமிலி விகரர்
ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
அத்துடன் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் பட்டிலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வேட்பு மனு திருமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் கட்சியின் ஊடகச் செயலாளருமான தோழர் ஸ்ராலின் தலைமையில் குறித்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வேட்பு மனுவில்
- முத்து இருளன் முருகன் (தோழர் ஸ்டாலின்) – கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளர்’ / கட்சியின் ஊடகச் செயலாளர்
- தங்கராசா புஸ்பராசா ( தோழர் S.R) –
- பெரிய முத்து வைரன் ஜயாமுத்து – ஒய்வு நிலை அதிபர்
- செல்வரத்தினம் புவனேஸ்வரி
- சிவலிங்கம் நாகராசா
- வில்வராஜா ஜெயவேந்தன்
- திருச்செல்வம் கயூரன்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Related posts:
|
|