அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பம்!

Monday, February 21st, 2022



அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட  நடவடிக்கையை அடுத்து வேலணை – புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதிய பேருந்து சேவை ஒன்று இன்றையதினம் இலங்கை போக்குவரத்து சபையால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

வேலணை  – புங்குடுதீவு – இறுப்விட்டி பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாகத்தினரூடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இன்றையதினம் புதி பேருந்து சேவை இறுப்பிட்டி அரியனார் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி மக்களின் அவசிய தேவை கருதியதான கோரிக்கையை ஏற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னனுக்கு வழங்கியிருந்த அறிவுறுத்தலுக்கிணங்க இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்திய பொது முகாமையாளர் குணபால செல்வத்துடன் குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடிப்பட்டிருந்தது.

இதற்கிணங்க குறித்த பகுதிக்கான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வடபிராந்திய பொது முகாமையாளர் குணபால செல்வம்  தெரிவித்திருந்தமைக்கு இணங்க இன்றையதினம் குறித்த பேருந்து சேவையை கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் மற்றும் வடபிராந்திய போக்குவரத்து சபையின் விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகள்  பிரசன்னத்துடன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக பொறுப்பாளர் சின்னையா சிவராசா வேலணை பிரதேச உதவி நிர்வாக பொறுப்பாளர் திருமதி அனுசியா ஜெயகாந்த் ஊர்காவற்றுறை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் புவி உள்ளிட்ட கட்சியின் பல பிரமுகர்களின் பிரசன்னத்துடன் குறித்த சேவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த சேவையானது புங்குடுதீவு பெருங்காட்டு சந்தியூடாக இறுப்பிட்டி கேரதீவு மடத்துவெளியை சென்றடைந்து யாழ்ப்பாணத்துக்கான சேவையை முன்னெடுக்கவுள்ளது..

இதேவேளை கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் குறித்த மார்க்கமூடாக சேவை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாராண சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இன்னிலையில் குறித்த சேவையானது தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரைகாலமும் புங்குடுதீவு பிரதான மார்க்கங்களை முன்னிறுத்தி  போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த நிலையில் இறுப்பிட்டி உள்ளிட்ட குறித்த பகுதிகளுக்கான சேவை இன்மையால் மக்கள் போக்குவரத்தில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையால்  மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர்கள் பொதுமக்கள் என பலரும் பல்வேறு அசௌகரியங்களை நாளந்தம் சந்தித்துவந்திருந்த நிலையில் இன்றையதினம் குறித்த சேவையை தமக்கு ஏற்படுத்தி தந்தமைக்காக குறித்த பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது - டக்ளஸ் தேவானந்தா சபையில் தெ...
உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
பொருளாதார ரீதியான அபிவிருத்தி சகல மட்டங்களுக்கும் பரவ வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் எதிர்பார்ப்பு!