சுனாமி பேரனர்த்தத்தின் 18 ஆவது நினைவு நாள் இன்று – அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!.

Monday, December 26th, 2022

சுனாமிப் பேரனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தியுள்ள பேரனர்த்ததின் 18 ஆவது ஆண்டு நினைவு இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே, சுனாமியின் பாதிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், சமகால அரசியல் நிலைவரங்கள், எதிர்காலத்த அரசியல் நகர்வுகள் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் பற்றிய கருத்துக்களை இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 26.12.2022

Related posts:

கையேந்தும் வாழ்வு நிலையில் இருந்து மாற்றம் காண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி அவசியம் - தம்பிலு...
யாழ். பல்கலை மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு சாதகமான தீர்வு - வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சர் டக...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஒலுவில் துறைமுகத்தின் அபவிருத்தி குறித்த முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையா...