கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து – நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தேவானந்தா!

Friday, January 21st, 2022

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார்.

இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டார்.

இதேவேளை தீ விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயவியல் பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் கிளிநொச்சி மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியிருந்தது. எனினும்  தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

Related posts:

பனம் தொழில் துறை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - அல்லைப்பிட்டி...
ஒருமித்த நாடா, ஒற்றை ஆட்சியா : மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அனைத்து முயற்சிகளுக்கும் பூரண ஒத்துழைப்பும் வழங்கப்படும் – திருமலை...