கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை – இந்தியா நாடுகள் கைகோர்த்து எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 2nd, 2021

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று, உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது, ஒத்துழைப்புக்களை வழங்கிய இந்தியக் கடலோரக் காவற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு, கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தஓபி சாஹார் ஆரக்க்ஷா  கப்பலில் நடைபெற்றது.

இதன்போது எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது, ஒத்துழைப்புக்களை வழங்கிய இந்தியக் கடலோரக் காவற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாகலே, இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கேந்திர முக்கியத்தவமும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பின் அவசியமும் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:

தேர்தல்கால பெறுபேறுகளை கொண்டு மக்களது அபிலாஷைகளை புறந்தள்ளப் போவதில்லை -  வவுனியாவில் டக்ளஸ் எம்.பி ...
அனுபவங்களின் அடிப்படையில், தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத...
ஜனாதிபதி ரணிலின் வெற்றி - தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்கால...

கூட்டமைப்பினரால் அதிகாரப் பரவலாக்கக்தை கொண்டுவர முடியாமற் போனது ஏன்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!
சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் வெல்வீர்கள் - டக்ளஸ் எம்.பி. தெரிவ...
பல்வேறு தீர்வுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராயப்பட்ட தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்தி குழு...