கடின உழைப்பே எமக்கான அரசியல் அதிகாரங்களை பெற்று தந்துள்ளன – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Sunday, June 18th, 2023
ஈ.பி.டி.பி கொண்ட கொள்கை மீதும் அது இதுவரை செய்த மக்கள் நலன் சார் வேலைத் திட்டங்களில் நம்பிக்கை வைத்து வழங்கும் ஆதரவுக்கரமே எமக்கான அரசியல் பலத்தையும் பேரம் பேசும் சக்தியையும் ஏற்படுத்தி தரும் – அதை விடுத்து எங்களுக்கு இதனை செய்து தாருங்கள் நாங்கள் உங்களுக்கான ஆதரவு கரங்களை தருகின்றோம் என்ற பேரம் பேச்சுக்கள் எமக்கு தேவையில்லை.
எனவே இதுவரை எமது கடின உழைப்பினால் கிடைத்த அரசியல் வேலைத் திட்டங்களே எமக்கான அரசியல் அதிகாரங்களை எமக்கு பெற்று தந்துள்ளன.
தொடர்ந்து எமது கட்சியின் அரசியல் கொள்கையை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் அதுவே எமக்கு ஆரோக்கியமான அரசியல் எதிர்காலத்தை ஏற்படுத்தி தரும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயற்பாட்டாளர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் சமகால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் அளிக்கையிலேயே அவர் மேற்கொண்டவறு தெரிவித்தார் . – 18.06.2023
Related posts:
|
|