கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை!

Wednesday, August 17th, 2022


கடலட்டை பண்ணை அமைத்து தொழிலில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ள யாகப்பர் கடற்றொழிலாளர் சங்கம்,  நாச்சிக்குடா மத்தி கடற்றொழிலாளர் சங்கம், நல்லாயன் கடற்றொழிலாளர் சங்கம் மற்றும்  செபஸ்தியார்புரம் கடற்றொழிலாளர் சங்கம் ஆகியவற்றின்  பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தேவையான அனுமதிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட கடற்றொழில் அமைச்சர் கடலட்டைப் பண்ணைக்கான விருப்பம் தெரிவித்தோர் குறித்த தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

Related posts:

துறைமுகம் அமைக்கப்பட்டால் மக்களின் வாழ்வியல் பறிபோகும் - டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் சுட்...
ஓஷன்பிக் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் நீர்வேளாண்மை அபிவிருத்தி - அமைச்சர் டக்ளஸ் தல...
அமைச்சர் டக்ளஸ் முல்லைத்தீவு விஜயம் - கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பி...