எல்லைதாண்டி வருவோரின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தி கடல்வளத்தை பாதுகாக்க வேண்டும்

Monday, October 9th, 2017

எல்லைதாண்டி மீன் பிடியில் ஈடுபடுவோரின் சட்டவிரோதச் செயற்பாடுகள் எமது தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் தொழில் பாதிப்புக்களையும், தொழில் உபகரணங்கள் பாதிப்பையும் ஏற்படுத்துவதாகவே அமைந்து வருகின்றன.

பல தடவைகள் இவ்விடயம் தொடர்பில் நான் இந்த சபையில் எல்லைதாண்டி வருவோரின் அத்துமீறல்கள் தொடர்பாகவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் அவர்கள் ஈடுபடுவதால் எமது கடல்வளத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியுள்ளேன். ஆனாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று(09.10.2017) நாடாளுமன்றத்தில் காப்புறுதி தொழில் ஒழுங்குபடுத்தல் விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,நேற்றைய தினமும் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டவர்களால், வடமராட்சிக் கடலில், தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது தொழிலாளர்களின் வலைகள் உட்பட தொழில் உபகரணங்களைச் சேதப்படுத்தியதுடன், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி அவர்கள் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தொழில் செய்ய முடியாமலும், தொழில் உபகரணங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் எமது கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இவ்வாறு தொழில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். அதேவேளை தொடர்ந்தும் எல்லைதாண்டி வருவதையும், தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழில் உபகரணங்களைப் பாவிப்பதையும் கட்டுப்படுத்த இராஜிய ரீதியில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related posts:

வடக்கு மாகாண சபை ஊழல் தொடர்பில் மத்திய அரசின் நடவடிக்கை வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக...
முல்லையில் சட்ட விரோத மீ்ன்பிடி முறையை பயன்படுத்துவோரைக கட்டுப்படுத்த புதிய பொறிமுறை - அமைச்சர் டக்ள...
வருமானம் குறைந்த மக்களுக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்ட சமுர்த்தி அதிகாரிகள...