ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 11th, 2019

நேற்றைய தினம் சக்தி, சிரச, மவ்பிம, சிலோன் டுடே ஊடக  நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள காடைத்தனமான செயற்பாடானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 1977ஆம் அண்டின் 8ஆம் இலக்க மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஏற்கனவே லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்பாக இடம்பெற்றிருத்த வன்முறை, சுயாதீன ஊடக நிறுவனத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை என்று தொடங்கி, நேற்றைய தினம் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஓர் ஊடகமானது தன்னைப் பற்றியோ அல்லது தான் சார்ந்த கட்சியைப் பற்றியோ, அமைப்பினைப் பற்றியோ தவறாக அல்லது போலியாக எதனையும் வெளிப்படுத்தியிருந்தால், அவ்விடயம் தொடர்பில் பிரஸ் கவுன்சில் இருக்கின்றது. அதில் முறைப்பாடு செய்ய முடியும். அல்லது சட்டரீதியிலான நடவடிக்கைக்குப் போக முடியும்.

எங்களைப் பற்றி ஓர் ஊடகம் போலியான தகவலை வெளியிட்டிருந்த நிலையில் நாங்கள் அது தொடர்பில் சட்ட நடவடிக்கைக்குப் போயிருந்தோம். அதில் எமக்கு சாதகமான தீர்ப்பே கிடைத்திருந்தது.

அவ்வாறானதொரு முறையினை நோக்கிச் செல்லாமல், இப்படி காடைத்தனங்களை ஊடகங்கள்மீது கட்டவிழ்த்து விடுவதானது கண்டிக்கத்தக்க விடயம் மட்டுமல்ல, கேவலமான விடயமும் ஆகும்.

இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் தாராளமாக இருக்கின்றது என்பது இதுதானா? என்றே கேட்கத் தோன்றுகின்றது.

அண்மைக்காலமாக ஊடகங்களை சிலர் கறுப்பு ஊடகங்கள் எனக் கூறி வருகின்றனர். நேற்றைய தினம் மேற்படி ஊடக நிறுவனத்தின் மீதான காடைத்தனத்திலும் முழுமையாக கறுப்பாடை அணிந்தவர்களே காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

ஊடகங்கள் மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும். உண்மையை மக்களுக்கு உரைக்க வேண்டும். ஊடக தர்மத்தினைப் பாதுகாக்க வேண்டுமே அன்றி, எந்தவொரு தரப்பினருக்கும் அடிபணிந்து போக வேண்டியத் தேவை அவர்களுக்கில்லை.

அதேபோன்று, தனியார் ஊடகங்களில் தனது அல்லது தங்களது கருத்துக்களை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என அழுத்தங்கொடுக்க முடியாது. அப்படியானவர்கள் சொந்தமாக ஊடகம் நடத்த வேண்டும்.

சக்தி ரி.வி, சக்தி எப்.எம். போன்ற ஊடகங்கள் நல்லமுறையில் செயற்பட்டு வருகின்றன. தவறுகளை சுட்டிக்காட்டுகின்றன. உண்மையிலேயே தவறு செய்கின்றவர்களை சுட்டிக்காட்டுகின்றன. உண்மையிலேயே தவறு செய்கின்றவர்கள் பற்றி யாரும்; கருத்துக்களைக் கூறினால், அந்தக் கருத்துக்களை வெளிக் கொண்டு வருகின்றனர். அதற்காக இத்தகைய காடைத்தனங்களை கட்டவிழ்த்துவிடக் கூடாது எனக் கேட்டுக் கொண்டு, எமது கட்சி இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றது என்பதைக் கூறிக் கொண்டு, அதே நேரம், அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பிலு; விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கொண்டு, இன்றைய தலைப்பிற்கு வருகின்றேன்.

Related posts:

நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வறுமையற்ற பகுதிகளாக மாற்றம் பெற வேண்டும் என்பதே எமது அபிலாஷை - டக்ளஸ் ...
டெங்கு நோயிலிருந்து வடக்கு மக்களை பாதுகாக்க விசேட திட்டம் உருவாக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ...
வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து வளமான வாழ்வியலை உறுதிப்படுத்துங்கள் - சுதுமலையில் டக்ளஸ் தேவானந்தா!

உள்ளுராட்சித் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்  ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் தேவானந்தா...
அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது  - வவுனியாவில் டக்ளஸ் தேவா...
வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் - நாடாளுமன்றில் செயலாளர் ந...