உள்ளூர் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய 600 மில்லியன் ஒதுக்கீடு : அமைச்சரவை அனுமதி – அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 25th, 2020

உள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் கடற்றொழிலாளர்கள் தாம் பிடிக்கும் கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதை கருத்தில் கொண்டு இன்று இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த அமைச்சரவை பத்திரத்தில் உள்ளூரில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை மீன்பிடி கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கும் அதை கொள்வனவு செய்ய 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்த குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

 ‘பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதைதான் இங்கு நடந்தேறியுள்ளது -  எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!
யாழ். மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவான...
சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அம...

எரிபொருள் தட்டுப்பாடு - பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை - அமைச்சர் டக்ளஸ் அற...
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை மக்களுக்கானவையாக பயன்படுத்தப்படுத்துங்கள் - செயளளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
டயலொக் நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு அவசியமான செயலி தயாரிப்பு -பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ள...