ஈழப் போராட்ட வரலாற்றில் வித்தான முதல் பெண் போராளி தோழர் சோபாவுக்கு அஞ்சலி மரியாதை!
Thursday, May 3rd, 2018ஈழப் போராட்ட வரலாற்றில் முதல் வீரகாவியமான தோழர் சோபா மதிவதனியின் 33 ஆவது நினைவுதினம் இன்றாகும்.
தமிழர் உரிமைக்காக ஈழப்போராட்டம் உருவான வரலாற்றில் யுத்த களத்தில் முதல் வித்தான பெண் போராளியாக சோபா என்று அழைக்கப்படும் மதிவதனி விளங்குகின்றார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரியான சோபா 1985 ஆண்டு வைகாசி மாதம் 03 ஆம் திகதி, அன்றைய ஈ.பி.ஆர்.எல் எவ் அமைப்பின் போராளியாக இருந்து காரைநகர் கடற்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் முதல் களப்பலியான பெண் போராளியாக விளங்குகிறார்.
எமது மண்ணின் விடிவுக்காக பெண்களது எழுச்சிக்கு வித்திட்டுச் சென்று களப்பலியான முதல் பெண் போராளியான தோழர் சோபா தமிழர் தேசமெங்கும் நினைவு கூரப்படவேண்டியவராவார்.
எமது ஆரம்பகால நீதியான விடுதலைபோராட்டத்தில் களத்தில் ஆகுதியான முதல் பெண் போராளிக்கும் அவருடன் அன்றை தாக்குதலில் வீரகாவியமான சக போராளிகளுக்கும் என்றும் நாம் அஞ்சலி மரியாதை செலுத்துவோம்.
Related posts:
|
|