இரு மொழிகள் அமுலாக்கம் எழுத்து மூல ஆவணமாக இருக்கின்றதே அன்றி அரச செயற்பாட்டு வடிவத்தினைப் பெற இன்னும் அது தயாராக இல்லை என்றே தெரிகிறது!

Wednesday, December 6th, 2017

இரு மொழிகள் அமுலாக்கம் என்பது இந்த நாட்டில் எழுத்து மூல ஆவணமாக வைத்துப் பாதுகாக்கப்படுகின்றதே அன்றி, அரச அலுவலகங்களில் செயற்பாட்டு வடிவத்தினைப் பெற இன்னும் அது தயாராக இல்லை என்றே தெரிய வருகின்றது- என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பொது நிர்வாக, முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள், உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது பகுதிகளில் கடந்த அசாதாரண காலகட்டத்திலிருந்து, பல்வேறு அரச துறைகள் சார்ந்த பணிகளில் ஆளணிப் பற்றாக்குறைகள் மிக அதிகமாக இருந்த நிலையில், தொண்டர் ஆசிரியர்களாக, சுகாதாரத் தொண்டர்களாக என அன்றிலிருந்து, இன்றுவரையில் எவ்விதமான ஊதியங்களும், சலுகைகளும் இல்லாத நிலையில் பணிபுரிந்து வருகின்ற பலர் தகைமைகள் இருந்தும், அனுபவம் இருந்தும் அரச நிரந்தரப் பணிகளில் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதொரு வியடமாகும என்று தேரிவித்துள்ளர்.

003

Related posts:

மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் சுயலாபங்களுக்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள் – செயலாளர...
யாழ்ப்பாணத்தில் 39 ஆலங்களின் புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதியுதவி வழங்கி வை...
அமைச்சர் டக்ளஸின் காலம் எமக்கான நேரம் - பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றது வடமாராட்சி!

மன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டிவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
இலாபம் ஈட்டுகின்ற துறையாக இல்லாது மக்கள் நலன் கருதிய துறையாக போக்குவரத்து சேவை இருக்கவேண்டும்!
வடபகுதி உடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...