இரயில் பயணிகள் மீதான கல்லெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு – டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை!
Saturday, August 13th, 2016
இரயில்களில் பயணஞ் செய்பவர்களை இலக்குவைத்து அண்மைக்காலமாக சில தீய சக்திகள் கல்லெறித் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறான தாக்குதலுக்கு இலக்காகிய அரச அதிகாரி ஒருவர் அண்மையில் பாரிதாபமான முறையில் மரணமடைந்துள்ளார். அதன் பின்னரும் இவ்வாறான தாக்குதல்கள் தொடருவதால், பயணிகள் பலர் மிகுந்த அச்சத்தினை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் இதனைத் தடுத்த நிறுத்தக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இரயில்களின் மீது குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான போக்குவரத்து இரயில்கள் மீது இனந்தெரியாத நபர்கள் கல்லெறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது. இச் செயற்பாடானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்க்கும்போது இது ஒரு திட்மிட்ட செலாகுமென்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.
இவ்வாறானதொரு தாக்குதல் காரணமாக அண்மையில் உதவிக் கல்விப் பணப்பாளரொருவர் பரிதாபமபன முறையில் மரணத்தைத் தழுவியதை நாம் அறிவோம். எனினும், இவ்வாறானதொரு ஆபத்து ஏற்பட்டதன் பின்னர்கூட இத்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. தொடரும் இத் தாக்குதல்கள் காரணமாக பயணிகளில் பலர் படுகாயமடைந்து வருகின்றனர் என்பதுடன் இரயில் பெட்டிகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பயணிகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டிய இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமர் அவர்களிடம் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
|
|
|


