இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க தவறியமையே நாட்டில் அசம்பாவிதங்கள் தொடர காரணம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

Tuesday, March 6th, 2018

நாட்டில் கடந்த 30 வருட கால யுத்தத்தம் நிறைவுக்கு பின்னரான இக்காலப்பகுதியானது இனங்களுக்கு இடையில் சந்தேகங்களை அகற்றி, பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்கின்ற கால கட்டமாக மாற்றப்பட்டிருத்தல் வேண்டும். அதனை செய்வதற்கு தவறிய ஒரு நிலையிலேயே கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள திகன பகுதியில் ஏற்பட்டுள்ள அசம்பாவித சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள திகன பகுதியில் ஏற்பட்டுள்ள அசம்பாவித சம்பவங்கள் தொடர்பில் நாடாளுன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

நாட்டில் பொறுப்பு கூற வேண்டிய அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக அரசியல்வாதிகள், ஊடகங்கள்ஈ சமூக மற்றும் மதத் தலைவர்கள் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதே நேரம், அனைத்து இன மக்களும் புரிந்துணர்வுகளோடு சில விட்டுக் கொடுப்புகளுடன் நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேற்படி சம்பவத்திற்கு மூல காரணமாக கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் காரணமாக  எம். ஜி. குமாரசிங்க என்பவர் உயிரிழந்துள்ளார். அன்னாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது மறைவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அனைவருடனும் எனது துயரங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்கும் எனது வேதனையை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் குமாரசிங்க அவர்களது இழப்பு தொடர்பிலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுது சொத்து இழப்புகள் தொடர்பிலும் இந்த அரசு விரைந்து இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத்தாருங்கள் - டக்ளஸ் எம்பியிடம் மன்னார் நடுக்குடா பகுதி மக்கள்...
ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
சட்டவிதிகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் பணிகளில் இருந்து ஒதுங்கி வேறு துறைகளுக்கு செல்வது சிறந்தது...

வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் அருகத...
தீவகத்தில் நீர் வேளாண்மை ஊக்குவிப்பு திட்டம் - தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட காசோலைகளை ...
நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!