அராலி மினங்குப்பிட்டி வீதி புனரமைப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 8th, 2019

நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாது கடல்தொழிலாளர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவரும் அராலி கிழக்கு மினங்குப்பிட்டி வீதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்புடன் கடல்தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படுவதற்கான ஆரம்ப நிகழ்வுகளை கடல்தொழில் மற்றும் நீரியல் வளஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இன்றையதினம் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

கடல்தொழிலை பிரதான தொழிலாக கொண்ட இப்பகுதியின் கடல் தொழில் இறங்கு துறைக்கு செல்லும் வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படாது தொழிலாளர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த குறித்த வீதி குறித்த பகுதி கடல்தொழிலாளர்களது கோரிக்கைக்கு அமைய புனரமைப்பு செய்யப்படுகின்றது.

இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக கடல்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு சுமார் 25 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதன் அடிப்படையில் 903 மீற்றர் நீளமான வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் கடந்த 60 ஆண்டுகளாக கவனிப்பாரற்று காணப்பட்ட குறித்த வீதி இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் செப்பனிடுவதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஜூலை கலவரம் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக் கலவரம் எனக் கொள்ள முடியாது - நாடாளுமன்றில்...
அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து - வடக்குக் கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடி...
மூன்று ஆண்டுகளில் நாற்பதாயிரம் வேலை வாய்ப்பு - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

அவலத்தில் வாழும் மக்களின் துயரம் துடைக்கும் ஆண்டாக புதுவருடம் பிறக்கட்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
“சுரக்ச” காப்புறுதிக்கு காப்புறுதி இல்லை – ஊழலே மிஞ்சி இருக்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ச...
அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடிப்பது மக்களின் அரசியல் தெளிவையே காட்டுகின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவி...