அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வடமேல் மாகாண “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, June 3rd, 2020

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வடமேல் மாகாணத்தில் “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த மாகாணத்தில் பல ஆண்டுகளாக இறால் செய்கை பலதரப்பட்டவர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவந்த போதிலும் அவை விஞ்ஞானபூர்வமான பொறிமுறைகளை கொண்டு மேற்கொள்ளப்படாமையால் பெரும் நட்டங்களை செய்கையாளர்கள் சந்திக்க நேரிட்டது.

ஆனாலும் குறித்த மாகாணத்தில் நவீன வசதிகளுடன் விஞ்ஞான பொறிமுறைகளை உள்ளடக்கிய வகையில் பொதுவான இறால் செய்கையை மேற்கொள்ளக் கூடிய இடங்களில் முன்னெடுத்தால் அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதுநிலை உள்ளதால் அதற்கான பொறிமுறைகளை உள்ளடக்கிய “வனமி” இரால் செய்கையை திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கையாக சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் இன்றையதினம் அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்த “வனமி” இறால் செய்கையை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலி...
இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - இந்திய உயர்ஸ்தானிகரிடம் வ...
தனங்கிளப்பில்இறால் வளர்ப்பை ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்!