அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஒலுவில் துறைமுகத்தின் அபவிருத்தி குறித்த முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையாடல்!

Thursday, December 9th, 2021

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் பிரதேச மக்கள் பயனடையும் வகையில் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், குறித்த துறைமுகத்தின் செயற்பாடுகளை கட்டங்கட்டமாக ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டுள்ளார்.

அதன்படி, முதற்கட்டமாக ஒலுவில் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டி மற்றும் களஞ்சியப்படுத்தல் பிரிவினை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் செயற்படுத்தவதற்கு கடற்றொழில் அமைச்சர் தீர்மானித்துள்ள நிலையில், அதுதொடர்பான முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், சம்மந்தப்பட்ட தனியார் முதலீட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

000

Related posts:

டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகள் மீண்டும் தொடரவேண்டும் - சான்றோர் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கோரிக்கை
மக்களை மறந்த தலைமைகளு க்கு பாடம்புகட்ட இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் - பட்டதாரிகள் மத்தியில் டக்...
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கை செலவு கூட்டத்தில் ஆராய்வு – திங்களன்று அம...

அரசாங்க ஊழியர்களின் இடமாற்றத்தின்போது அவர்களது குடும்ப நிலைமைகள் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடா...
மாகாண சபை முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் எமது மக்களின் வறுமை இல்லாது போயிருக்கும் - செயலாளர் நாயக...
கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேம்படுத்துவார் – நாடாளுமன்ற உறுப்பினர்...