கூட்டமைப்பின் இரட்டைத் தோணி அரசியல் அவர்களையும் மூழ்கடித்து, தமிழ் மக்களையும் மூழ்கடித்துவிடும்!

Monday, September 10th, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைத் தோணிஅரசியல் பயணம் தமிழ் மக்களை நிர்க்கதிக்குள் தள்ளிவிட்டுள்ளது.

தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த கூட்டமைப்பினர் தற்போது, தமதுசுய நலன்களுக்காக தென் இலங்கையில் அரசுடன் இணக்க அரசியல் வழிமுறையையும், வடக்கு கிழக்கு இலங்கையில் அரச எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான இரட்டைத் தோணிப் பயணமானது அவர்களையும் கடலுக்குள் தள்ளிவிட்டிருப்பதுடன், தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையையும் வலுவிழக்கச் செய்துள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் கூர்முனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இணக்க அரசியல் நாடகம் முறித்துப்போட்டுவிட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாi~கள் தொடர்பாக தென் இலங்கையில் கூட்டமைப்பு கொடுக்கும் வரைவிலக்கணமானது, தமிழ் மக்கள் இரத்தமும், சதையுமாக நடத்திய போராட்டத்தை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளது.

ஆனால் வடக்கு கிழக்கில் அரசாங்கத்தை எதிர்ப்பது போலவும், அரசுக்கு சவால் விடுவது போலவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாசாங்கு செய்கின்றனர். தெற்கில் இணக்க அரசியலுக்கு ஒரு அணியும், வடக்கு கிழக்கில் அரச எதிர்பு அரசியலை முன்னெடுக்க இன்னொரு அணியாகவும் இரு அணிகளாக கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகளை தமக்கு வாய்ப்பான போது கூட்டமைப்பின் வேலைத்திட்டமாக பரப்புரை செய்வதும், பாதகமாக அமையும்போது அது கூட்டமைப்பிலுள்ளோரின் தனிப்பட்ட நடவடிக்கை என்றும் கூறி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

Related posts:

கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன தீவக வைத்தியசாலைகள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி சுட்டிக்காட்டு!
இயலுமானவரை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உழைக்கவேண்டும் – கட்சியின் நல்லூர் பிரதேச...
கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!