ஶ்ரீலங்கா எயார்லைனஸ் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!

Sunday, December 24th, 2017

மிகின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கா எயார்லைனஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் இந்தக் குழு நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ம் திகதி கிடைக்கப் பெறும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்

Related posts:


மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 21 ஆம் திகதிவரை இடம்பெறாது - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவ...
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியம் - பிரதமர் மஹிந்த...