பிரதமர் ரணில் சீனா பயணம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனாவிற்கு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சீனா செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு தலைவர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமருடன் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, நிரோஷன் பெரேரா மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் செல்ல உள்ளனர். எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகின்ற நிலையில் மறுநாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.நாவில் ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு!
நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம்!
பிரதமர் ரணில் பணிப்புரை - எதிர்வரும் ஜூன் மாதம்முதல் பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை50 சதவீதமாக குற...
|
|