அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக 5000 பேர் இணைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/05/Job.jpg)
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஐயாயிரம் பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட மற்றும் போட்டி பரீட்சையின் ஆகக் கூடிய புள்ளிகளை பெற்ற பரீட்சார்த்திகள் நேர்முக பரீட்சையின் மூலம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்தார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று திங்கட்கழமை காலை வழங்கப்படவுள்ளது.
இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவதன் மூலம் கடந்த வருடத்தில் ஜனவரி 30ம் திகதி அளவில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் முழுமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை - சமுகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்...
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் - பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|