வெடித்து சிதறிய விமானம் : அனைத்து பயணிகளும் பரிதாபமாக பலி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/02/625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg)
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ வான்பரப்பில் பயணிகள் விமானமொன்று வெடித்துச் சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் நடுவானில் நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், பயணித்த 71 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் பயணம் செய்த 71 பேரில் 65 பேர் பயணிகள் என்பதுடன் ஏனைய 6 பேர் விமான ஊழியர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதேவேளை, விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
வங்கதேசத்தில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் கிரிக்கெட்!
ருமேனியாவில் முஸ்லிம் பெண் பிரதமரை நிராகரித்தார் ஜனாதிபதி!
பிராஸில் துப்பாக்கிச் சூடு : மூவர் காயம்!
|
|