பிரான்சில் தீவிபத்து :13 பேர் பலி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/08/perans-300x225.jpg)
பிரான்ஸ் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் 13 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் பிரிட்டனி மாகாணத்தின் தலைநகரான ரென்னெஸ் நகரின் ரோவென் பகுதியில் உள்ள பிரபல மதுபான விடுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் உள்துறை மந்திரி பெர்னார்ட் காஸேனியூவே தெரிவித்துள்ளார்.
மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே என்ற தகவல் வெளியாகியுள்ளது
Related posts:
இலண்டனில் மக்கள் மீது மீண்டும் மோதிய வான் !
உலகின் அமைதிக்கு நம்பிக்கை ஒளி : அணுவாயுதத்தை கைவிடுகிறது வடகொரியா!
வீட்டுவசதி - விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களில் வடகொரிய தலைவர் பங்கேற்பு!
|
|