அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீவிபத்து – 19 பேர் உயிரிழப்பு!

Friday, March 29th, 2019

பங்களாதேஷ் டாக்காவில் அமைந்துள்ள 22 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 17 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: