T – 20 புதிய தரப்படுத்தல் வெளியீடு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/201710292309103953_Pakistan-beat-Srilanka-by-36-runs-in-3rd-T20-international_SECVPF.jpg)
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் வெளியிடப்பட்ட இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளின் புதிய தரப்படுத்தலுக்கமைய பாகிஸ்தான் அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி தொடருக்கு முன்னர் நியூசிலாந்து அணி முதலிடத்தை பெற்றிருந்தது. இந்த போட்டித் தொடரில் இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதை அடுத்து நியூசிலாந்து அணி முதலாம் இடத்தை இழந்துள்ளது.
இதற்கமைய அந்த அணி இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களை முறையே மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் இந்திய ஆகிய அணிகள் பிடித்துள்ளன.
இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி தரப்படுத்தலுக்கமைய 8வது இடத்தை இலங்கை அணி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது
Related posts:
ஒருநாள் கிரிக்கட் தரவரிசைப் பட்டியல் வெளியானது!
கிரிக்கெட் மைதானத்தை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வழங்க தயார் - என ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் !
வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது முதல் டெஸ்ட் போட்டி!
|
|